மது அருந்துவோர் பொய் சொல்ல மாட்டார்கள்| Dinamalar


கந்த்வா:மத்திய பிரதேசத்தின் கலால் அதிகாரி ஒருவர், ‘மது அருந்துவோர் பொய் சொல்ல மாட்டார்கள்’ என கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்து உள்ளது.
கொரோனா தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன்படி கந்த்வா மாவட்டத்தில் ‘இரு ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தியோருக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும்’ என, மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது.
மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன.அவற்றில், இரு டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றினை காண்பித்தால் மட்டுமே மதுபானம் கிடைக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் மாவட்ட கலால் அதிகாரி ஆர்.பி.கிரார் கூறியதாவது: மதுபானம் வாங்க வருவோர் தடுப்பூசி செலுத்தியது குறித்து வாய்மொழி உத்தரவாதம் அளித்தால் போதும். ஏனெனில் மது அருந்துவோர் பொய் சொல்ல மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.