லக்னோ : ”மாநில மற்றும் மத்திய அமைப்புகளை சேர்ந்த போலீசாருக்கும் இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தேவை,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி.,க்கள் மாநாட்டை துவக்கி வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: கொரோனா தொற்று காலத்தில் மாநில போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ போலீஸ் படையை சேர்ந்த போலீசார் சிறப்பாக பணியாற்றினர். தங்களை பற்றி கவலைப்படாமல் மக்களுக்கு சேவை செய்தனர் .
மத்திய அமைப்புகளை சேர்ந்த போலீசாருக்கும், மாநில போலீசாருக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு தேவை. அப்போது தான் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு உட்பட பல்வேறு பிரச்னைகளிலும் மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற முடியும். பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்க ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
லக்னோ : ”மாநில மற்றும் மத்திய அமைப்புகளை சேர்ந்த போலீசாருக்கும் இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தேவை,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.உத்தர பிரதேச மாநிலம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.