பார்லி., தொடர் சுமூகமாக நடக்கும்: லோக்சபா சபாநாயகர் நம்பிக்கை| Dinamalar


புதுடில்லி: ‛‛நவ.,29ல் துவங்கும் பார்லிமென்ட் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்கும்,” என்ற நம்பிக்கை உள்ளதாக லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடர் நவ.,29ல் துவங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமூகமாக நடக்கும் என நம்பிக்கை உள்ளது. அனைத்து விவகாரங்கள் குறித்தும், தொகுதிகளில் எம்.பி.,க்கள் செய்த பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும்.

latest tamil news

மக்கள் பிரதிநிதிகள், அவைக்கு உள்ளேயும், வெளியேயும் நேர்மறையான விஷயங்களை பற்றி மட்டுமே பேச வேண்டும். நாடே உயர்ந்தது. நமது நாட்டை விட வேறு நாடு உயர்ந்தது இல்லை என அனைவரும் நம்ப வேண்டும். இவ்வாறு ஓம் பிர்லா கூறினார்.

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.