புதுடில்லி: புதிய வேளாண் சட்ட வாபஸ் அறிவிப்பை தொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெறும்படி அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி கூறியதாவது: புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று மன்னிப்பு கோரியது வரவேற்க தக்கது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தோல்வி பயத்தினால் பா.ஜ., அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
ஓட்டுக்காக நாட்டின் பிற மாநிலங்களில் இறங்கி வரும் பா.ஜ., அரசு, ஜம்மு – காஷ்மீர் மக்களை மட்டும் தண்டிக்கிறது. இங்கு பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பவர்களை மகிழ்விப்பதற்காகவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது போல, ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.
புதுடில்லி: புதிய வேளாண் சட்ட வாபஸ் அறிவிப்பை தொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெறும்படி அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.ஜம்மு – காஷ்மீர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.