கர்நாடக மாநிலம் உடுப்பி பி.யூ பெண்கள் கல்லூரியில், கடந்த டிசம்பர் 27 -ம் தேதி ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனை எதிர்த்து மாணவிகள், கல்லூரி வாசலில் போராட்டம் நடத்தினர். அதற்கு எதிர்வினையாக, பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் காவித் துண்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் நிபுணர்கள் குழு பரிந்துரைக்கும் வரை, காவித் துண்டிற்கும், ஹிஜாப் அணிவதற்கும் மாணவர்களுக்குத் தடை விதித்தது கர்நாடக அரசு. அதோடு, மதம் சார்ந்த உடைகளை மாணவர்கள் கல்வி நிலையங்களில் அணியக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.